Pages

Friday, February 28, 2020

பாபுராஜபுரம் ஊராட்சி முஸ்லீம் தெருவில் நீர் தொட்டி அமைத்து திறக்கப்பட்டது

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

பிப்ரவரி 28, 2020. அன்று கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம் சார்பாக மேற்கு ஒன்றியம்  பாபுராஜபுரம் ஊராட்சி முஸ்லீம் தெருவில் குறு மின் விசை பம்பு மூலம் நீர் தொட்டி அமைத்து திறக்கப்பட்டது 

இந்த நீர் தொட்டியானது கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்டது இதை திறப்பதற்காக திரு கா.அன்பழகன் எம்எல்ஏ அவர்கள் மூலம் திறக்கப்பட்டது

இதனுடைய சில புகைப்படங்கள்......












Monday, February 17, 2020

புளியஞ்சேரி TPC கொள்முதல் நிலையம் திறக்கும் வரை அப்பகுதி மக்கள் உள்ளிருப்பு போராட்டம்


அஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்).


February 17,2020. பாபுராஜபுரத்தில் அமைந்துள்ள புளியஞ்சேரி TPC கொள்முதல் நிலையம் திறக்கும் வரை அப்பகுதி விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம் 

பாபுராஜபுரத்தில் அமைந்துள்ள புளியஞ்சேரி TPC நெல் கொள்முதல் நிலையம் அதிகாரிகள் அறிவுறுத்தலின்படி திடீரென்று மூடப்பட்டதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். 

தஞ்சை மாவட்டம் பாபுராஜபுரம், புளியஞ்சேரி, சுவாமிமலை மற்றும் சுற்றுவட்டாரங்களில் மிகப்பெரிய நிலப்பரப்பில் கடந்த 20 ஆண்டுகளாக விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர் தங்கள் நிலத்தில் விளையும் நெல் மணிகளை புளியஞ்சேரி உள்ள TPC மையத்தில் தான் கொள்முதல் கொள்முதல் செய்வது குறிப்பிடத்தக்கது